ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்..


ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வழங்கினார்.
இலவச சைக்கிள்
ஓட்டப்பிடாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறளுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வ.உ.சிதம்பரனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழாவுக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் விஜயன் வரவேற்று பேசினார்.
கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
விழாவில் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், 65 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 30 ஊனமுற்றோருக்கான இலவச மூன்று சக்கர சைக்கிள், 150 ஊனமுற்றோருக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் வக்கீல் மதுரம் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் கனகராஜ், கட்சி நிர்வாகிகள் பட்டவராயன், செல்லப்பா, கண்ணன், மாவட்ட ஊனமுற்றோருக்கான ஒருங்கினைப்பாளர் ராஜசெல்வி, யூனியன் ஆணையாளர் சசி சிவானந்தம், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் லதா மாசாணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு...

22-09-2013 ஞயிற்றுக்கிழமை கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு கடந்த 22-09-2013 அன்று கோவில்கடவில் நடந்தது. இதில் நமது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததின் பேரில் கலந்துகொண்டோம். தலைவர் தமிழினவேந்தர் மாநட்டில் சிறப்புரையாற்றினார். கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் , கோவில் கடவு, காந்தலுர்,பெரடிபள்ளம், சுரக்குளம், மிசன் வயல், சாணல்மேடு,திண்டுகொம்பு, மூணார் என பல்வேறு மலை கிராமங்களில் பெரும்பாண்மையாக நமது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழ்கின்றனர். இதில் மூணார் தவிர மற்ற கிராம மக்கள் தேயிலை தோட்ட தோழிலாளர்கள் அல்ல.பெரும்பாண்மையாக விவசாயம் செய்து வருகின்றனர். தொழில் செய்து வருகின்றனர். நில உடைமையாளர்களாக உள்ளனர். அனைவரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொழிவாரி கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பாகவே குடியேறிய மக்கள். தற்போது இடுக்கி , தேவிகுளம், பீர்மேடு பொன்ற பகுதியில் வாழும் இம்மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச்சான்றிதழ் பெரும் பிரச்சனை. முல்லைப்பெரியாறு பிரச்சனைக்குப்பிறகு பெருமளவில் நம்மக்களை பாகுகுபடுத்திபார்க்கும் நிலை உள்ளது. இதற்காக விரைவில் திருவனந்தபுரத்தில் ஒரு பேரணி நடத்தி போராட வேண்டும் என்று அப்போராட்டத்தை அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநாட்டில் சிகப்பு பச்சை கொடியுடன் உணர்வோடு கலந்துகொண்ட நமது பெண்களின் எழுச்சிமிகு உணர்வு நம்மை வியக்கவைத்தது. தலைவருக்கு மக்கள்கொடுத்த வரவேற்பு பிரமிக்கவைத்தது. மறையூர்,காந்தலூரில், கோவில்கடவில் தலைவர் சமுதாயக் கொடிஏற்றி வைத்தர்.தலைவரின் வருகை அறிந்து சந்திக்க வந்த பெண்கள் கூட்டம் நம்மை பிரமிக்கவைத்தது. குடும்பம் குடும்பமாக மாநட்டில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாது தலைருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சி மிக்கது.தலைவருடன்தோழர் கண்மணிமாவீரன்,

துரைப்பாண்டியன்,குபெந்திரபாண்டியன்,கிங்தேவேந்திரன்,தேவப்பிரியன்,மதுரை ஆம்புலன்ஸ் முனியாண்டி உள்ளிட்ட பலர் உடன்சென்றிருந்தனர்.

நன்றி! தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

சனி, 21 செப்டம்பர், 2013

தென் தமிழகத்திலே சாதி வெறி அதிகம் சாதி கொலை அடித்தடி அதிகம்..இங்க பாண்டியானர்கள் அவசியம்.

தோழி விக்டோரிய (தேவேந்திர குல வேளாளர் பற்றிய ஆய்வு செய்யும் முனைவர் பட்டத்துக்கான மாணவி) அவர்களுடன் நாடந்த சிறு உரையாடல் உங்க கவணத்திற்கு..

நாங்க : வணக்கம் தோழி

விக்டோரிய : வணக்கம் (பிள்ளை தமிழ்)

நாங்க : நீங்க எந்த நாடு?

விக்டோரிய : நான் ஆமேரிக்கா 

நாங்க : சுற்றுலா வந்தீங்களா?

விக்டோரிய : இல்லை நான் என் பி.கச்.டி (Phd) படிப்பிற்காக வந்து இருக்கேன்..

நாங்க : எந்த துறை அங்கு பி.கச.டி க்கு இங்க என்ன வேலை??

விக்டோரிய : ஆதாவது நான் தமிழ் குடி பற்றிய ஆய்வு செய்கிறேன்..அதிலும் குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் என்றும் மள்ளர் என்றும் குடும்பமார் என்றும் பள்ளர் என்றும் சொல்லப்படுகிற ஒரு தமிழ் இனத்தை பற்றி ஆய்வதற்காக வந்தேன்.. 

நாங்க : நீங்க எந்த பல்கலைகழகம்?? இங்க எப்படி?

விக்டோரிய : நான் கலிப்போர்னியா பல்கலைகழகம்.. அங்க இருக்கிற மார்ட்டின் என்ற ஆசிரியர் இங்கு இருக்கிற காமராஜ் பல்கலைகழக நாகராஜ் என்ற ஆசிரியரின் உதவியுடன் என் ஆய்வை முடிக்க இங்க கடந்த முன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறேன்..

நாங்க : சரி...இமானுவேல் சேகரனார் பற்றி என் எழுத போரிக்க?? இதுவரை என்ன ஆய்வு பன்னிருக்கிங்க.. தோழி

விக்டோரிய : ஆதாவது தோழர் ( சிரிப்பு) நான் சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனார் படுகொலைச் செய்யப்பட்ட பின் முன் என்ன மாற்றும் நிகழ்ந்து இருக்குனு 
அப்புறம் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகம் எப்படி மன்னர் என்ற நிலையில் இருந்து பள்ளர் என்றும்..விசவாயம் முதல் போர் வரை செய்தாங்க என்றும் 
இப்போ அவங்க அரசியல் நிலை..சமூக நிலைப் பற்றி குறிப்பு இருக்கு (எடுத்து வைத்து இருக்காங்க)..

நாங்க : இந்த ஆண்டு வீரவணக்க நாள் எப்படி இருக்கு??

விக்டோரிய : பரவாஇல்லை என்று தான் சொல்ல வேண்டும்..முன்னின ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு ரெம்ப ஆள்கள் குறை னு தான் சொல்லனும்..போன ஆண்டு 8 லட்சம் பேர் வந்து இருப்பாங்க னு நீனைக்கிறேன்..இந்த ஆண்டு 80000 பேர் வந்தாலே ஆது பெரிய வெற்றி தான் னு நினைக்கிறேன்..

நாங்க : நீ டாக்டர் கிருஷ்ண சாமி பற்றி கேள்வி பட்டுருப்பீங்க அண்ணன் பசுபதி பாண்டியம் ஜான் பாண்டியன் பற்றி கேள்வி பட்டுருப்பீங்க இது யார் பெரியவங்க??

விக்டோரிய : சென்னை மற்றும் பெரும் நகரத்துல படிச்சவங்க அதிகம்..அங்க டாக்டர் படிச்சுக்காரு..அரசியல் தெரிந்தவர்..எம்எல்ஏ வாக இருந்தவர் அவர்கள் அங்கே இருக்கிற சமூக உறவுகளை ஒன்றினைத்து சமூக வளர்ச்சிக்கு போராட உதவ வைக்க முடியும்..அங்க பசுபாதி மற்றும் ஜான் பாண்டியனார்கள் தேவை குறைவு..ஆனால் இங்கு தென் தமிழகத்திலே சாதி வெறி அதிகம் சாதி கொலை அடித்தடி அதிகம்..இங்க பாண்டியானர்கள் அவசியம்..கண்டிப்ப தேவை னு நான் சொல்லுவேன்..

ஆதாவது தேவைப்படும் போது டாக்டர் அரசியல் பலத்தை பாண்டியனார்களுக்கு கொடுக்கனும்.. பாண்டியனார்கள் தேவைப்டும் போது டாக்டர்க்கு தோழ் கொடுக்கனும்..அப்போதான் இந்த சமூகம் சாதிய வெறிக்கு எதிர்த்து நிலைக்க முடியும்..

நாங்க : இமானுவேல் சேகரனார் பற்றி என்ன நீனைக்கிறீங்க??

விக்டோரிய : நீங்க வார்த்தைக்கு வார்த்தை இமானுவேல் னு சொல்லாதீங்க.. சாதி ஒழிப்பு போராளினு இமானுவேல் சேகரனார் என்று சொன்ன என்ன ?? (சிரிப்பு)

நாங்க : மன்னிக்கனும் ஐயா பற்றி உங்க கருத்து??

விக்டோரிய : அவரு முன்னால் ரானுவ வீரர்..தன் கிட்ட இருந்த 50 ஏக்கர் நிலத்தை வித்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பணிக்க செலவு செய்தவர்..கிரேட் கர்க்கன் கூட நெருங்கிய நண்பர்.. தென் இந்தியவின் பகத்சிங்.. சாதி ஒழிப்பு போராளி.. சாதி கடந்த மக்களால் நேசிக்கப்படுபவர்..அவர் படுகெலை செய்துவிட்டாங்க அவர் எழுச்சின் தாயகம் இன்னும் இருக்கு....

நாங்க : தமிக அரசியல் பற்றி??

விக்டோரிய : ரெம்ப கஷ்டமா இருக்கு நான் படித்த அரசியல் வேறு இங்கு நடக்குறது வேறு..எங்கு பார்த்தாலும் சாதி அரசியல் சாதி பார்வை..அரசு வன்முறை..பாருங்க வாடக வண்டி இல்ல அரசு பஸ் வழக்கமா வருகிற வண்டி கூட எந்த காரணமும் இல்லாமல் நீறுத்திடாங்க...ஆனா மாலை போட மட்டும் ஆள் ஆனுப்புவாக..கேவலமாக இருக்கு..போராளிகளுக்கு இப்படினா பின்ன மக்களுக்கு?? உங்களுக்கு தெரியாதா..

நாங்க : இறுதியா ஒன்று நான் உங்க கூட ஒரு புகைப்படம் எடுக்கலாமா??

விக்டோரிய : (சிரிப்பு) சரி வாங்க..

நாங்க : அடுத்த ஆண்டு சந்திகலாம்...

விக்டோரிய : ஆது முடியாது என் கால அளவு முடிந்துபோச்சு..வணக்கம் தோழர் (பிள்ளை தமிழ்)

நாங்க : நன்றி...வணக்கம் தோழி (அவங்க பிள்ளை தமிழில் நாங்க) சிரிப்பு..

நன்றி --தோழர் கனகவேல் ராஜன் மு.பா...

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தேசம் செலுத்தும் வீர வணக்கம் ……. தந்தை பெரியாருக்கு .........


1957 ல் முதுகுளத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது ; அக்கால கட்டத்தில் வலிமையான சாதி ஆதிக்க வாதிகள் இருந்த நிலையில் – எந்த ஒரு கட்சியும் – ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை.

பெரியாரும் ‘விடுதலை’ நாளேடும் மட்டும் தான் – உறுதியாக – சாதி ஆதிக்க சக்திகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காமராசர் ஆட்சிக்கு வேண்டுகோள் விடுத்த தந்தை பெரியார், “ இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நானே போராட்டத்தில் குதிப்பேன் ” என்று அறிக்கை விடுத்தார்

தந்தை பெரியார், தியாகி இமானுவேல் சேகரன்- சாதியில்லா சமுதாயத்தை படைக்க முயன்ற மாபெரும் தலைவர்கள் – சாதி ஒழிப்புப் போரில் களத்தில் நிற்கும் போராளிகளூக்கு – வழிகாட்டும் ஒளி விளக்குகள் !

தந்தை பெரியாருக்கு சிரம் தாழ்ந்த வீர வணக்கம்

உணர்வுடன் ...
தேசம் ஒருகிணைப்பு குழு
 

மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் கடந்த முறை ஆசிரியர் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததைக் கண்டித்தும், ஆசிரியர் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக் கோரியும் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு இடஒதுக்கீட்டுப் பாதுகாவலரும் சமூக சமநீதிப் போராளியுமான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா தலைமையில் தமிழக மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஆசிரியர்களும், மாணவர்களும் அணிதிரண்டு வாரீர்! ஆசிரியர் தேர்வு வாரியம் நோக்கி

நாள்: 23.09.2013.
நேரம்: காலை 11 மணி.

இவண்:

மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்-தமிழ்நாடு.
விருப்பம் 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

இமானுவேல் சேகரன், ஒண்டிவீரன் குருபூஜைகளுக்கு வெளியூரிலிருந்து வர அனுமதிக்க முடியாது

சென்னை: இமானுவேல் சேகரன், ஒண்டிவீரன் குருபூஜைகளில் கலந்துகொள்ள வெளியூர் களிலிருந்து வாகனங்களில் மக்கள் வர அனுமதிக்கக்  கோரி தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சுதந்திரபோராட்ட தியாகிகள் போன்றவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் குரு பூஜைகள் என்ற பெயரில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும் செவலில் பூலித்தேவனுக்கும், நெற்கட்டும் செவல் அருகே உள்ள கிராமத்தில் ஒண்டிவீரனுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கும் குருபூஜைகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். இந்த குருபூஜைகள் நடக்கும்போது இரு சமூகத்தினரிடையே சமீபகாலமாக மோதல் ஏற்படுவதும் நடந்து வருகிறது. இதையடுத்து, குருபூஜைகள் நடைபெறும் மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களிலி ருந்து வாகனங்கள் மூலம் ஆட்கள் வருவதை தடுக்க போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு குருபூஜை கள் நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

 இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளியூரிலிருந்து வாகனங்களில் ஆட்கள் வருவதற்கு 144 தடை உத்தரவை அம்மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக கடலூர் மாவட்டத்திலிருந்து மக்கள் வாகனங்களில் வருவதற்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத் துக்கு உத்தரவிடக்கோரி கடலூரைச் சேர்ந்த விஜயா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதேபோல், நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவல் அருகே உள்ள கிராமத்தில் ஒண்டிவீரனுக்கு குருபூஜை நடத்தும் நிகழ்ச்சியில் ராமநாதபுரத்திலிருந்து வாகனங் களில் மக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் என்பவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த இரு மனுக்களை யும் விசாரித்த நீதிபதி கிருபாகரன் தீர்ப்பைத் தள்ளிவைத்தார். இந்நிலையில், மதுரையிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் வந்துள்ள நீதிபதி இந்த 2 வழக்குகளையும் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அரசுக்கு நோட்டீஸ்
இந்நிலையில் குருபூஜைகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், குருபூஜைகளின்போது, ஏற்கனவே சாதி அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் முன் விரோதங்களை தீர்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு அதனால் பெரிய அளவில் கலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சாதி அடிப்படையிலான குருபூஜைகள் நடத்த தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இம்மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர் வால், நீதிபதி சத்யநாராயணன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.



உளவு விமானம் மூலம் கண்காணிப்பு
பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி தென்மாவட்டங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகரின் முக்கிய இடங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆளில்லாத உளவு விமானத்தை பரமக்குடிக்கு நேற்று கொண்டு வந்தனர். இந்த விமானத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே போலீசார் கண்காணிக்க உள்ளனர். நேற்று மாலை போலீசார் முன்னிலையில் அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உளவு விமானத்தை இயக்கி செயல்விளக்கம் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், தென் மாவட்ட எஸ்பிக்களுடன் மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் பின் அவர் பரமக்குடி சென்றார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி..



பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரனின் 56-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் விவரம்:
இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் இளைஞர் மன்ற தலைவர் துரைகாந்த் மற்றும் அக் கிராம பொதுமக்கள் காலை 7.00 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் அழகர்சாமி, செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தி.மு.க. சார்பில் அக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், சுப.த. திவாகரன், உ.திசைவீரன், சேது.கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் ஏ.அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக மாவட்டச் செயலாளர் நென்மேனி என்.ஜெயராமன் தலைமையில், பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, மதுரை மாவட்டச் செயலாளர்கள் பூமிநாதன், வீர.தமிழ் செல்வம் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் தொல்.திருமாவளவன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் பாம்பூர் இருளன் ஆகியோர் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் ஏ. ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ஆர்.ராம்பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜெ.ஆலம், முகம்மது ரபீக், நகர் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மாவட்டத் தலைவர் கே.சண்முகராஜ், எஸ்.சி. பிரிவு மாநில இளைஞரணிச் செயலாளர் இளங்கண்ணன், வர்த்தக அணி நாகராஜன் ஆகியோர் அக் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நாசாத் திருவள்ளுவன் தலைமையிலும், மள்ளர் நாடு நிறுவனத் தலைவர் சுப.அண்ணாமலை, சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாவட்டத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரன் பேரவை நிறுவனத் தலைவர் பூ.சந்திரபோஸ் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள சமுதாய மக்கள் பால்குடம் எடுத்து வந்தும், முளைப்பாரியுடன் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்..


போராளி இமானுவேல் சேகரன்...



காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.
1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_
1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.
2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.
3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.
5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.
6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.
7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.
8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,
“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.
9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.
இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.
இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.
இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.
தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.
ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.
பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”
“பிண்டத்துக்கு பிராமணன்
துண்டத்துக்கு துலுக்கன்
தெண்டத்துக்கு சம்சாரி
என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.
இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.
நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.
ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.
காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?
தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.
இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.
அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.
அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.
வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?
இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல்...


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இம்மானுவேல் சேகரனின்  நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நேற்று அவரது 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதிய தமிழகம்  கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்  வீரவணக்கம் செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம்  டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ  கூறியதாவது:-

டாக்டர் கிருஷ்ணசாமி: இமானுவேல் சேகரன் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனால், சமூகக் கொடுமைக்காக முதலில் குரல் கொடுத்து உயிரை தியாகம் செய்தவர். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.   கடந்த 2011-12 இல் நடந்த சம்பவங்களால்தான் இந்த விழாவை மேலும் சிறப்பாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த விழா நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இது மக்கள் இயக்கமாகவே மாறிவிடும். அடக்கம், கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இவை இருந்தால்தான் நாம் எதையும் பெற முடியும். பல மாவட்டங்களிலிருந்து இந்த விழாவுக்கு பலரும் வர முடியவில்லை என்றார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

அனைத்துத் தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் விழாக்களுக்கு அரசு சமமான மரியாதையை அளிக்க வேண்டும் - டாகடர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


அனைத்துத் தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் விழாக்களுக்கு அரசு சமமான மரியாதையை அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
நாட்டின் விடுதலைக்காகவும்,மொழியைக் காக்கவும் சமூக நீதிக்காகவும் போராடிய தலைவர்களின் பிறந்தநாள்,நினைவு நாளை அனுசரிப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சில குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு,அரசியல் விழாவாக நடத்தப்படுகிறது.
1996-97 இல் விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கும்போது எதிர்ப்புக் கிளம்பியதாகக் கூறி அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூரை மையமாகக் கொண்டு, தாழத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்ககாக பாடுபட்ட இம்மானுவேல் சேகரன் 1957 இல் படுகொலை செய்யப்பட்டார்.கடந்த 20 ஆண்டுகளாக,அவரது நினைவிடம் உள்ள பரமக்குடியில்  நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.2011-12 இல் நிகழந்த சம்பவத்தின் அடிப்படையில் த்ற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.அதோடு நினைவு நாள் நிகழ்ச்சிக்குச் செல்வோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை இருக்கிறது.
அனைத்து தலைவர்களின் விழாக்களுக்கும் இத்தகைய  நடைமுறையையே காவல்துறை பின்பற்றுமா என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம்,சென்னிமலையில் நடந்த ஒரு நினைவுநாள் விழாவில்,தமிழக அமைச்சர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.அங்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுக்கு விழா எடுக்கும்போது மட்டும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.இது தாழத்தப்பட்ட மக்களின் மனநிலையைப் பாதிப்பதாக உள்ளது.
அனைத்து தலைவர்களின் விழாக்களுக்கும் அரசு சமமான மரியாதையைக் கொடுக்க வேண்டும் அரசே விழாவை நடத்துவதோடு,இத்தகைய விழாக்களில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வதற்குப் பதிலாக அந்ததந்த  மாவட்ட ஆட்சியர்களை பங்கேற்கச் செய்யவேண்டும்.இதன்மூலம்  தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.இது தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தீர்க்கமான முடிவை எடுப்பது அவசியம் என்றார்.

மானாமதுரை, பாப்பாங்குளத்தில், வீடுகளை இழந்தவர்களுக்கு, நிவாரண உதவி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்-டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


மானாமதுரை, பாப்பாங்குளத்தில், வீடுகளை இழந்தவர்களுக்கு, நிவாரண உதவி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது;
மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில், 26 வீடுகளை இடித்த சம்பவத்தில், ஊராட்சி தலைவி அம்சவள்ளி, அவரது கணவர் தங்கராஜ் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு, இதுவரை தற்காலிக வீடுகள் கூட அமைத்து தரவில்லை.
அமைச்சர் வைகைசெல்வன், அரசு சார்பில் தலா ஒருவருக்கு ரூ. 60 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். இது போதாது. ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரூ.5 முதல் 10 லட்சம் வரை வழங்கவேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத் தியதாக, அரசியல் கட்சிகளிடம், அரசு நஷ்ட ஈடு வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அப்படியானால், வீடுகளை இடித்த ஊராட்சி தலைவர், அவரது கணவர், சம்பவத்தில் இருந்த போலீசார், வருவாய்த் துறையினரிடமிருந்து, நஷ்டஈடு தொகையை வசூலிக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை சந்தித்து, விளக்கம் அளிப்பேன். சட்டசபையில், பாப்பாங்குளம் பிரச்னை குறித்து, கேள்வி எழுப்பப்படும், என்றார்.

இம்மானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு வாடகை கார்களில் செல்ல போலீஸ் அனுமதிக்க வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ....


புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ இன்று மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’’பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வருகிற 11–ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாடகை கார்களில் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வாடகை கார்களில் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இது சரியல்ல. எல்லோரும் சொந்தமாக கார் வைத்து இருக்க முடியாது. எனவே போலீசார் வாடகை கார்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அரசு பஸ்கள் வாடகைக்கு விட வேண்டும்’’என்று கூறினார்.

புதன், 11 செப்டம்பர், 2013

முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட போது தந்தை பெரியார் விடுத்த அறிக்கை:




‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமி
ல்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’
முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, 
முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட போது 
தந்தை பெரியார் விடுத்த அறிக்கை:

‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமி
ல்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. 

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’

முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட போது தந்தை பெரியார் விடுத்த அறிக்கை:




‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமி
ல்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’
முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, 
முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்ட போது 
தந்தை பெரியார் விடுத்த அறிக்கை:

‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமி
ல்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. 

எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’