ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

முத்துராமலிங்க (தேவர்) யார்?

"முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 1957 தேர்தலுக்கு சற்று முன்னர், கமுதி, முதுகுளத்தூர் வட்டாரங்களில் 'தேவர்கள், நாடாரின் கடைகளில் சரக்கு வாங்கிடக் கூடாது. தேவர்கள், தேவர்களின் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்கிடல் வேண்டும்" எனும் நல்லிணக்கப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது குறித்து நாடார் சாதிப் பிரமுகர் வேலுசாமி நாடார் ஒரு புகார் தந்திருக்கிறார். 1957 கலவரத்தின்போது நடந்த சமாதானக் கூட்டத்தில் அனைத்து சாதிப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதில் நாடார் தரப்பில் கலந்து கொண்டவர் வேலுசாமி நாடார் ஆவார். இவர் காங்கிரசுக்கட்சியில் இருந்தவர். கலவரத்தினை விசாரிக்க மத்தியமந்திரி வந்தபோது, 'கடைகளில் சாமான் வாங்கக் கூடாதென்று' இடைஞ்சல் செய்கிறார்கள் என்று வேலுசாமிநாடார் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறப்பட்டது அப்போது.

அன்று தேவர் சொன்ன 'பகிஸ்காரத்தை'த்தான் சமூக அமைதியைக் குலைக்கும் இந்து மத பயங்கரவாதி ராமகோபாலன் செய்து வருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக