ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 17 அக்டோபர், 2011

பரமக்குடியில் துப்பாக்கிகள் சொல்லும் பாடம்!

s
பரமக்குடியில் காவல் துறை 9 பேரை சுட்டுக் கொன்றுள்ளது.  ஆதிக்கசாதிவெறியனை எதிர்த்து போராடிய மாவீரனும் படுகொலை. மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்களும் படுகொலை.
சாதிவெறியன் முத்துராமலிங்க குருபூஜை அன்று சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் விடுமுறையென அரசே விழாவை நடத்துகிறது. அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு அளவே இருக்காது. போகும் வழியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடிசைகளுக்கு தீ வைப்பது சர்வ சாதாரண விடயம். அப்போதெல்லாம் காவல் துறை என்ன செய்யும்? கையில் கிலுகிலுப்பும், வாயில் பால் பாட்டிலும் தான் வைத்திருக்கும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டமாக அணிதிரள்கிறார்கள் என்றால் பொருத்துக்கொள்ளாது அரசும், அரசின் ஏவல் நாய்களான காவல் துறையும். ஏதாவது காரணம் சொல்லி ஒடுக்குவது. அதையும் மீறினால் துப்பாக்கி சூடுதான். மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதை இங்கு கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் இந்த கூட்டத்தை சுட்டால் அரசு கேள்வி கேட்காது. மாறாக விருதுகள் தான் தரும் என்பது காவல்துறைக்கு நன்றாகத் தெரியும் அரசின் எண்ணமும் காவல் துறையின் எண்ணமும் வேறுவேறல்ல. அதனால் தான் அனுமதியே தேவையில்லாமல் சுட்டிருக்கிறது காவல்துறை.
இந்த படுகொலைகள் என்ன பாடம் போதிக்கின்றன? இனிமேல் எவரொருவரும் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தையோ அதைப்பற்றி பேசுவதையோ கனவில் கூட நினைக்கக்கூடாது என்பதைத்தவிர வேறென்ன?
1999ம் ஆண்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேரின் இரத்ததை இதே காவல்துறை மண்ணில் உரமாக்கியது.
இந்த நிகழ்வுகளை வெறும் சிலர் வெறும்  ‘காவல்துறையின் வன்முறை’ என்றே சுருக்கிப்பார்க்கின்றனர். அதில் புதிய தமிழகமும், வி,சிக்களும் கூட அடக்கம்.
இதை அவர்களின் காவல்துறை மீதான கண்டனத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பரமக்குடியின் படுகொலைகளுக்கு காவல் துறை மட்டும் செய்த வன்முறை தான் காரணம் என்றால், மேலவளவு முருகேசன் படுகொலைக்கு யார் காரணம்? கீழ்வெண்மணியில் 44 பேர் தீயில் வெந்ததற்கு யார் காரணம்? அந்த கோரப்படுகொலையை நிகழ்த்திய ஆதிக்க சாதிவெறியன்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு பெற்று அகந்தையுடன் வெளியே வந்தார்களே யார் காரணம்?
வன்முறை வடிவங்கள் மாறுகிறதே தவிர வன்முறை நிகழ்த்தும் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மொழிவேறுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், சாதிவெறிக்கு ஒரே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் வன்கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். இதன் பொருள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பார்ப்பனீய வெறி புரையோடியுள்ளது பாகுபாடு பார்க்காமல்.
அதன் நீட்சியாகத்தான் இந்தியாவின் அரசு இயந்திரத்திலும் பார்ப்பனீயம் இரண்டற கலந்துள்ளது. அரசியலமைப்புச்சட்டங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் துறை என்று அரசு இயந்திரத்தின் எல்லா கூறுகளிலும் பார்ப்பனீயத்தின் செல்வாக்கும் வெறியும் தொடர்கிறது. ஆக, வெறுமனே காவல்துறையின் வன்முறை என்று சுருக்கிப்பார்ப்பது இந்த சாதிவெறி பிடித்த சமூகத்தின் மற்ற பிற கூறுகளை மக்களின் பார்வையிலிருந்து தப்பிக்கவைத்துவிடும். இன்று ஜெயா ஒரு விசாரணை கமிசனை அமைப்பது செய்திகள் வந்தன அந்த விசாரணை கமிசன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமையும். பார்ப்பனீய நீதியரசர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களின் பார்ப்பனீயத்து ஆதரவான பணியை அரசு விடாமல் பெற்றுக்கொள்கிறது. அந்த கமிசன் என்ன தீர்ப்பு வழங்கும்? பொது சொத்தை காப்பாற்ற காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்று பாசிச ஜெயா வாந்தியெடுத்ததையே அந்த கமிசனும் வாந்தியெடுக்கலாம். ஜெயா வாயும், கமிசன் வாயும் வேறுவேன்றாலும் பார்ப்பனீய திமிர் ஒன்றுதானே!
தொடர்ச்சியான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இருந்தால் மக்களை ஆசுவாசப்படுத்த மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யலாம். அதுவும் அத்திப்பூத்த நடவடிக்கைத்தான்.
இவ்வாறுதான் காவல்துறையும் நீதித்துறையும் செயல்படுகின்றன ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாக!
இந்தப்படுகொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ் கொம்பன்கள் புது வியாக்கானம் கொடுக்கின்றனர். தமிழ் தேசிய சித்தாந்தப்படி சாதிமறந்து தமிழராய் ஒன்றிணையாதவரை சாதிக்கலவரங்கள் தொடரும் என்று ஆருடம் கூறுகின்றனர் அரசியலற்ற கோமாளித்தனமான இந்த வார்த்தைகளை சொல்பவர்களை பழைய செருப்பால் அடித்தாலும் நமக்கு ஆத்திரம் தீராது. அவர்களின் வாயில் மலத்தை கரைத்து ஊத்தினால் ஒருவேளை புத்தி வருமோ என்னமோ தெரியாது. ஒருபக்கம் ஈழத்தாய் அம்மா என்று முறையாக அறிவிக்கப்படாத அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராகத் திகழும் சீமான் பரமக்குடி சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லையே இது தான் தமிழ்தேசியத்தின் இலட்சணம் என்று கேள்வியெழுப்பினால் அதற்கு தமிழ்தேசியவாதிகள் ஏன் எதற்கெடுத்தாலும் தமிழ் தேசியவாதிகளை குறை கூறுகிறீர்கள். திராவிட அரசியல் செய்பவர்கள் தான் இதற்கு காரணம் என்று திராவிடத்திடம் மடைமாற்றிவிடலாம். திராவிடம் மக்கள் மத்தியில் தோலுரிக்கப்பட்டு பல நாட்கள் ஆகின்றன. ஆனால் பழைய திராவிடத்தை தமிழ் தேசியம் என்று பெயர் மாற்றி பேசிவரும் வீர்ர்களை அடையாளம் காண்பதே தற்போதுள்ள முதன்மையான பணி. இவர்கள் திராவிடத்தை விமர்சிக்கும் அதே வேளையில் அண்ணா திராவிட முன்னேற்ற கட்சிக்கு மட்டும் சொம்படிப்பதை கவனிக்கவும்.
ஒடுக்கப்பட்டவனும் தமிழன் என்றால் அவனை ஒடுக்கும் ஆதிக்கசாதிவெறியை எதிர்த்து போராடுவதும் தமிழ்தேசியவாதிகளின் கடமைதானே! சாதிவெறியை கண்டிக்கக்கூட வக்கில்லாத உங்களிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழன் என்ற அடையாளத்தை வேண்டி கையேந்தி நிற்கவில்லை. அப்படி சமூகம் அவனையும் தமிழனாக பாவிப்பதுமில்லை. நோகாமல் நோன்பு பிடிப்பது போல தமிழ் தேசியம் சாத்தியப்பட அனைவருக்கும் நோகாமால் சாதிமறந்து ஒன்று சேர்வது மட்டும் தான் இதற்கான தீர்வு என்கிறது தமிழ்தேசியம். சாதிவெறி மறந்து ஒன்று சேருங்கள் என்று அடிப்பவனைப்பார்த்து கூறாமல் அடிவாங்குபவனை பார்த்து கூறும் உங்கள் தமிழ் தேசியம் எங்கள் மூத்திரத்துக்கு சமம்.
தமிழ் தேசியம் இப்படியிருக்கிறதே என்று தலித் அரசியல் தலைவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சட்டமன்ற பேரவையிலிருந்து தான் கிருஷ்ணசாமியால் வெளியே வரமுடிகிறதே தவிர கூட்டணியிலிருந்து அல்ல! விடுதலைச் சிறுத்தைகளும் எதிர் கட்சி அரசியலுக்காகக்கூட இதை முன்னெடுக்கவில்லை. கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டனர். எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தமில்லை என்று ஜான் பாண்டியன் தரப்பு நிறுத்திக்கொண்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான கட்சியாக, நேர்மையாக அவர்களுக்காக போராட கட்சியாகத்தான் தலித் கட்சிகள் செயலற்று இருக்கின்றன. செ.கு தமிழரசன் கிருஷ்ணசாமி அதிமுகபக்கம் என்றால் வி,சி திமுக பக்கம். யாரும் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம் இருப்பதில்லை அவர்களுக்காக போராடுவதுமில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டுக்களாக ஓட்டு போட்டும் வாத்துக்கூட்டங்களாகத்தான் இதுவரை அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசியல் அதிகாரம் வென்றால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று தலித் கட்சிகள் சித்தாந்தம் பேசலாம். அதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தயாராகலாம்.
அரசியல் அதிகாரம் என்பது என்ன? மாநிலத்தின் முதலமைச்சராக ஆவதா? அப்படி முதல்வர் பதவி கிடைத்தால் வன்கொடுமைகள் தடுக்கப்பட்டுவிடுமா? உ.பி.யில் இன்றும் தாழ்த்தப்பட்ட பெண் முதல்வராக இருந்தும் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.
அரசியல் அதிகாரம் என்பது தலித் இயக்கங்கள் சொல்லும் நாடாளுமன்ற அரசுப்பதவிகள் அல்ல. மாறாக இந்த அரசு இயந்திரத்தை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உழைக்கும் மக்களுக்கான நமக்கான அரசு இயந்திரமாக மாற்றியமைப்பது தான். அப்படி மாற்றியமைத்தால் தான் நமக்கான அரசியல் அதிகாரம் பெறமுடியும். நமக்கான அரசியல் அதிகாரம் பெற அரசு இயந்திரத்தை மாற்றியமைக்கவும் ஆதிக்கசாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களே ஆயுதப்போராட்டத்திற்கு தயாராவோம்! நக்சல் பாரியாய் அணி திரள்வோம்!
பலியிடுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல – டாக்டர் அம்பேத்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக