ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 அக்டோபர், 2011

மீண்டெழும் பாண்டியர் வரலாறு.......செந்தில் மள்ளர்


இந்நூலின் முதல் இயலில் பண்டை தமிழகத்தின் நிலத்தியல் கூறுகளையும் அதில் மருத நில மக்களின் வாழ்வியலையும் இம்மக்களின் மரபுப் பெயரே மள்ளர் என்பதையும் பல்வெறு இலக்கிய, இலக்கண கல்வெட்டுச் சாண்றுகளோடு விளக்கி உள்ளார்.

இரண்டாவ்து இயலில் மருத நிலத்தில் தான் அரசு தோன்றியது.
என்பதையும் மள்ளர் குலத்தில் தான் அரசர் தோன்றினர் என்பதையும் தொல்க்காப்பியம் கூறும் மருத நிலத் தலைவனான வேந்தன் என்ற சொல்லே இந்திரன் என்று ஏற்றம் கொண்டு பின்னர் தேவேந்திரன் என்று தோற்றம் கொண்டுள்ளது என்பதையும் , வேந்தன் வழி வந்த வேளாண் குடி மக்களே இன்று தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அடையாளப்படுத்தி வருகிறனர். என்பதையும் , இம்மக்கள் புரிந்துவரும் போர் தொழிலின் அடையாளமாக சிவப்பும் , பயிர்த்தொழிலின் அடையாளமாக பச்சையும் என் மள்ளர்களின் சமுகக் கொடி உருவாக்கப்பட்ட வரலாற்றினையும் விள்க்கியுள்ளார்.
4/10/10

மூன்றாவது இயலில் –தமிழர்களிடத்தில் முதன்முதலில் தோன்றிய ஆட்சி முறை குடும்பிய முறை எனப்படும் ஊர்க்குடும்பு ஆட்சிமுறையே. என்பதையும், இக்குடும்பன் ஆட்சி முறையே பாண்டியர்களின் அடிப்படையான உள்ளாட்சி அமைப்பு முறை என்பதையும், பாண்டியர்களின் உள்ளாட்சி முறையான ஊர்க்குடும்பு ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வடுகர்களின் பாளையப்பட்டு முறை வலிந்து உருவாக்கப்பட்ட வரலாற்றினையும் விளக்கி உள்ளார்.

நான்காவது இயலில் பாண்டியர் என்ற சொல்லிற்க்கு பொருள் கூறி பாண்டியர் நாடு என்பது மள்ளர்(பள்ளர்) நாடே என்பதை சான்றுக் காட்டி விளக்கி பாண்டிய மரபினர் மள்ளர்களே என பல்வேறு தரவுகளுடன் யாவரும் ஏற்கும் வகையிலும், எளிதில் புரிந்து கொள்ளும் முறையிலும் நிறுவியுள்ளார். நிறைவாக பாண்டியனிடமிருந்து சோழனும் சேரனும் பிரிந்து சென்று அர்சாண்ட செய்தியையும் ஆற்றுப்படுத்தி மள்ளர்க்குலமே மன்னர் குலம், தேவேந்திரர் குலமே மூவேந்திரர் குலம் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி தமிழ்ச்சாதிகள் பலவற்றின் வேர்களும் விழுதுகளும் மள்ளர்க் குடியிலேயே குடிக்கொண்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வரலாற்று பெருநூல் 528 பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இந்நூலினை அச்சிட்டு வெளியீட்டு விழாக் காண ஆகும் தொகைக்கு தோள்கொடுத்து துணை நிற்க்குமாறு மள்ளர் மீட்பு களம் இனமான சொந்தங்களை உரிமையோடு வேண்டுகிறது.

வரலாற்றை நேர்செய்ய, தமிழ் சமூகத்தை சீர் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்

மண்ணுரிமை மாத இதழ்.மள்ளர் மீட்புக்களம்
2/3 மள்ளர்ப்புரம்,
காலாங்கரைப்பட்டி அஞ்சல்
கோயில்ப்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்.
அஞ்சல் குறியீட்டு எண் : 628 721.

அலைப்பேசி எண் :
99444 37196
99422 31920

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக