ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 17 அக்டோபர், 2011

இறப்பை கொண்டாடும் சாதி வெறி!


பரமகுடி நிகழ்வின் போது நான் இணையம் பக்க வர இயலாததால் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சிக்கு எதிராக பத்திரிக்கை செய்தியையும் எதிர்பார்க்க முடியாததால் இணையத்தில் தேடி கொண்டிருந்தேன். ஒருவாறாக அறிய கிடைத்தபோது பங்காளி ராஜன் ஆல் இன் ஆல் தளத்தில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்!.

அச்சம்பவத்தின் நிகழ்வு, சூழல் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அது நிச்சயமாக சாதிக்கலவரம் இல்லை, காரணம் தாழ்த்தபட்ட சாதி என அழைக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. அது காவல்துறைக்கும், ஊர்வலம் வந்த மக்களுக்கும் நடந்த மறியல், மோதலாகி பின் கலவரமாகி கடைசியில் படுகொலையில் முடிந்திருக்கிறது, ஆனாலும் ஒரு சில ஆவணங்களை பார்க்கும்பொழுது இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தபட்ட படுகொலையோ என சந்தேகிக்க வைக்கிறது!

சாமி என்ற படத்தில் சாதி ஊர்வலத்தை தடுக்க படத்தின் நாயகன் பொறுக்கி(அப்படி தான் அவரே சொல்லிக் கொள்வார்) விக்ரம். கல், கப்படாக்களை வைத்திருப்பது போல் இங்கே காவல் துறை கற்களை சேமித்து வைத்திருக்கிறது, எதற்காக இருக்கும்? ஊர்வலத்தின் போது ரோடு பழுதுபட்டால் அதை சீரமைக்கவா?. அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும், பிற சாதியினர் வன்முறையை தூண்டிவிடக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை அங்கே அழைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வன்முறையை தூண்டியதே காவல்துறையை போலத்தானே தெரிகிறது!.



இவ்விசயத்தில் சரியாக ஆராயப்பட்டு, படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையை சார்த்த உயர் அதிகாரி வரைக்கும் விசாரிக்கபட்டு, தக்க தண்டனை பெற வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க!
இறந்து போன மனிதர்களுக்காக வருத்தப்படாமல் அதை கொண்டாடியிருக்கும் சாதி வெறி பிடித்த இழிபிறவிகளின் செயலை தான் இந்த பதிவில் உள்ள படத்தில் காண்கிறீர்கள், அத்தோடு நிற்காமல் அந்த பதிவின் பின்னூட்டத்திலும் தனது சாதி வெறியை காட்டிக்கொண்டிருக்கிறார்கள், தம்மை தேவர் சாதி என அழைத்து கொள்ளும் கொட்டையெடுத்த புலிகள்!

இந்த கொட்டையெடுத்த புலிகள் தலைவராக கொண்டாடும் முத்துராமலிங்கம் இவர்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், நிறைய பொய் சொல்லி தம்மை பெரிய அப்பாடக்கராக காட்டி கொண்டிருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது.

முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், தேவர் அகமுடையார் தனிதனியா அல்லது ஒரே குழுமமா என சந்தேகமாக இருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் இந்த கேடுகெட்ட சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. என் தாத்தா பெயர் மாயன், பெரியப்பா பெயர் பெரிய கருப்பன். சிறு வயதிலேயெ நகரத்துக்கு பெயர்ந்து விட்டதாலும், சுற்றிலுமான விளைவுகளால் ஊறிய பகுத்தறிவாலும் என்னால் சாதி என்ற ஒன்றை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன், மற்ற சாதியினர் அடையாளமாக பயன்படுத்துவதை போல இந்த சாதி இல்லை, இங்கே வெறி தலைவிரித்தாடுகிறது, தாழ்த்தபட்டவன் இறப்பை கொண்டாடும் கேடுகெட்ட செயலாக!.

சுதத்திரத்திற்கு முன் கள்ளர்கள் என அழைக்கபட்டவர்கள் எங்கே குற்றம் நடந்தாலும் கைது செய்யபட்டார்கள், பின் குற்றபரம்பரை என அழைக்கப்பட்டு தினம் காவல்நிலையத்தில் ஒரு முறை ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கபட்டது, அதை எதிர்த்து உடைத்தவர் இந்த அப்பாடக்கர் முத்துராமலிங்கம் அல்ல. ஒரு ஆங்கிலேயர், அச்சூழ்நிலையில் சாதியை மறந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் பலர், அம்மாதிரி மாறிய முன்னோர்கள் வம்சம் வந்தவர்களில் ஒருவர் தான் இன்று புதுகை அப்துல்லா என்ற பெயரில் பதிவெழுதி கொண்டிருக்கும் அப்துல்லா!

இம்மானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத்திற்குடனான பகை இப்போது ஏற்பட்டதல்ல, அவர்கள் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம், இம்மானுவேல் தாழ்த்தபட்டவர்களின் தலைவன் ஆவதை ஆரம்பத்திலிருந்தே முத்துராமலிங்கம் விரும்பவில்லை என்பது அப்போதைய ஆவணங்கள் நமக்கு சொல்கின்றன. தலித்துகளையும் நாமே பார்த்து கொள்கிறேன், இம்மானுவேலை தலைவனாக ஏற்று கொள்ளமுடியாது என்றும், அவன் எப்படி எனக்கு சமமாக உட்காரலாம் என்றும் தமது சாதி திமிரை காட்டி பேசியவர் தான் முத்துராமலிங்கம்!

தலித்துகள் என்று மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் காமராஜரையும் சாணாப்பயல் என்றும், சோத்துக்கு இல்லாதவன் என்றும் பேசி தமது சாதி திமிரை காட்டியவர் தான் இந்த முத்துராமலிங்கம்.
அசுரனின் இந்த பதிவில் உங்களுக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கும்!


அச்சம்பவத்திற்கு பிறகு பத்ரி எழுதிய பதிவு ஒன்றில் மற்றொரு சாதி வெறியர் தமது பதிவை இணைத்திருந்தார், அதில் இம்மானுவேல் ஒரு பொம்பளபொறுக்கி என்ற ரேஞ்சுக்கு குற்றசாட்டுகள் இருந்தன மேலும் ஒரு இடத்தில்

//காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். //

காமராஜ் நாடாரம்! அவர் தான் இந்த சண்டைக்கே மூல காரணமாம், எப்படி திரிக்கிறார்கள் பாருங்கள், தமது ஆதர்ஷ நாயகன் கடவுளாக்கப்பட வேண்டும் என்றால் தன் மனைவி வேசி என சொல்லவும் தயங்க மாட்டார்கள் போல.

//ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிளிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர்//

வரிசையா சொல்லிட்டு இன்னொனு சொல்றார் பாருங்க, தேவர் ஐயாவின் அடைமொழிகளாம், என்னமோ அந்த வார்த்தைகளோ அந்த முத்துராமலிங்கத்திற்காக தான் உருவாக்கபட்டது போல!

புத்தகம் வெளியிட்டார்கள், என்ன இருந்தது அதில், தேவர் சாதி அழிய வேண்டுமென்றா எழுதியிருந்தது, தாழ்த்தபட்டோர் எழ வேண்டுமென்று தானே இருந்தது, சமுதாய விடிவெள்ளி என்றழைத்தால் உன் வீட்டு சூரியன் காணாமல் போய் விடுமா என்ன?, என்ன ஒரு சாதி வெறி, தாம் ஒரு ஆதிக்க சாதி என்பதை மறைக்கக்கூட தெரியாத வெள்ளந்தி போல இந்த நண்பர், அநேகமாக பலமுறை மாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும், அதனால் தான் எதோ நடுநிலைவாதி போல் தம்மை அடையாளபடுத்தி கொள்ள அவர் முயச்சித்திருப்பது தெரிகிறது, ஆனாலும் பார்ப்பனியம் மறைய முடியா விசமாச்சே அய்யா!

இங்கே ஏன் பார்பனீயம் வந்தது!?

சாதிய கட்டமைப்பு, வர்ணாசிரம அடுக்கு எல்லாம் பார்பனீயத்தின் கொள்கைகள் தான். நிறவெறியை நாம் ரேஷிசம் என அழைப்பது போல் உயர்சாதி திமிரை பார்பனீயம் என்று அழைக்கிறோம். அதை முதன் முதல் பிராமணர்கள் கொண்டு வந்ததால் அவர்கள் பாப்பான் ஆனார்கள், உயர்சாதிய எண்ணம் இல்லாதவர்கள் பார்பனீயம் என்ற வார்த்தையை கேட்டு தம்மை தான் சொல்வது போல் நினைப்பதில்லை, மனதில் கொஞ்சமேனும் உயர்சாதிய திமிர் இருந்தாலும் உங்களால் தாங்கி கொள்ள முடியாது. தாம் விஷ்ணுவின் நெற்றியில் இருந்தவர்கள், பிறகு நெஞ்சிலுருந்து என வகைப்படுத்தி தம்மை மேல் சாதியாகவும் பின் வருபவனற்றை தமது அடிமை சாதியாகவும் கட்டமைத்து தமது வர்ணாசிரம சுவற்றை எழுப்பினான் பார்ப்ப்பனன்!

கீழே ஒரு தாழ்த்தபட்டவன் நிற்கிறான். அவன் தோளின் மேல், ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவன், அவன் தோளின் மேல் ஒரு பிற்படுத்தப்பட்டவன் இப்படி ஒவ்வொரு அடுக்காக அமைத்து உச்சாணி கொம்பில் தம்மை அமர்த்தி கொண்டதை தான் பார்பனீயம் என்கிறோம்!, இந்த சாதிய அடுக்கை உடைத்து விட்டால் அங்கே எப்படி இருக்கும் பார்பனீயம், தம்மை உயர்சாதியாக நினைத்து கொள்ளும் மூட,முட்டா தேவர் சாதியினர், அவர்கள் தோளில் அமர்ந்து ஒருவன் காதில் செய்து கொண்டிருக்கிறான் என்பதையே மறந்து விடுகிறார்கள்!

தே.மகன் படத்தில், ஸாரி சுருக்க சொன்னால் அர்த்தம் மாறுகிறது, தேவர்மகன் படத்தில் இன்னொரு சாதிவெறியர் சிவாஜி பேசுவது போல் ஒரு காட்சி.

”என்னய்யா பண்ணசொல்ற
போருக்கு கூப்பிட்டப்ப, வேல்கம்பையும், வீச்சருவாளையும் எடுத்துகிட்டு வெற்றிவேல், வீரவேல்னு போருக்கு போனவியக நம்ம பயலுக, இப்ப அதை கீழ போடச்சொன்னா எப்படி போடுவானுங்க?”

எப்படி தெரியுமா இருக்கு, எல்லையில் நிற்கும் ராணுவத்தினர் அதே துப்பாக்கியை கொண்டு வந்து ஊருக்குள் அனைவரும் போட்டு தள்ளிவிட்டு, பழகிடுச்சுங்க இப்ப கீழ போடச்சொன்னா எப்படின்னு கேக்க சொல்ற மாதிரி இருக்கு!

அடமுட்டாப்பதருகளா, இந்த சாதி உங்களுக்கு என்ன செய்தது, தமிழகம் விட்டு வேறு நாட்டிற்கு போய் நான் இந்த சாதி எனச்சொல், உன்னை மலத்திற்கு சமமாக தான் பார்ப்பான். அப்படிபட்ட சாதியை வைத்து எதை புடுங்கப்போகிறாய், உன்னையும் மற்றவர்கள் போல் தானே உன் அம்மா பெற்றாள். வாயில உன்னை வாந்தி எடுக்கலையே, என் எப்படி வந்தது இந்த உயர்சாதி திமிர்?

பகத்தறிவு ஒன்று தான் விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது, உண்மையில் நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?, உன் சாதி திமிர் இன்னும் எத்தனை உயிர்களை கொன்றுவிட்டு அடங்கும். இன்னும் நீ திருந்தவில்லை என்றால் உன்னையும் மனிதனாக நினைத்து இந்த பதிவிட்டதற்காக நான் வெட்கப்பட்டு கொள்கிறேன்!http://valpaiyan.blogspot.com/2011/09/blog-post_14.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக