ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு பதில் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ் !

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியனை கடந்த 11ந் தேதி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் 13ந் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜான்பாண்டியனை காவலில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜான்பாண்டியன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: அரசும், போலீசாரும் எனது வளர்ச்சியை பொறுக்காமல் என்னை தடுத்து வருகின்றனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்ல இருந்த என்னை வல்லநாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் போலீசார் என்னை தடுத்து வைத்திருந்தனர். இதற்காக அரசு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி வாதாடுகையில், பரமக்குடியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஜான்பாண்டியன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்றார். இந்த வழக்கை நீதிபதிகள் 3 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரை சஸ்பெண்டு செய்ய கேட்டு வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசுக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக